அண்டை மாநில அழிவுதானே நமக்கென்ன போச்சு என்று நம் வீட்டுக் கதவுகளை அடைத்துக் கொள்ள முடியாது.
தண்ணீர் தர மறுப்பவர்கள்தானே அவர்களுக்கேன் உதவி செய்ய வேண்டும் என்று கையைக் கட்டிப் போட்டுக் கொள்ள முடியாது. அப்படிச் செய்தால் மனிதம் மரித்துப் போனது ,தமிழகத்தில் உள்ளவர்களுக்கு ஈரமற்ற இதயம் என ஏசுவார்கள் உலகத்தவர்.
பேரிடர் காலத்தில் பிறர்க்கு உதவுக என்றுதான் நமது தமிழ் அறம் சொல்கிறது.
அறவழி வாழ்கிற சூர்யா, கார்த்தி சகோதரர்கள் முதலில் தங்களின் உதவித் தொகையான 25 லட்சத்தை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
தொடர்ச்சியாக மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் 25 லட்சம் அனுப்பி இருக்கிறார் . இன்னும் பலரின் உதவிக்கரம் தங்களின் வங்கி கணக்கில் இருந்து வழங்குவார்கள் என கேரள அரசும் அந்த மாநில மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.
வள்ளல்களே ,உச்சங்களே , வழி காட்டி விட்டார்கள்.
இன்னும் என்ன தயக்கம்?