குறி பார்த்து சுட்டார்கள். எதிரி நாட்டினரை வேட்டை ஆடுவது போன்று வேன் மீது ஏறிப் படுத்து ,அமர்ந்து வசதி போல சுட்டுத்தள்ளினார்கள். 13 பேர் பலியானார்கள். இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் படு காயமுற்றார்கள். மே மாதம் 22 ம் தேதி நடந்த படுகொலை தொடர்பாக பலர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
மார்க்சிஸ்ட் கட்சி தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதி மன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் ஆகியோர் இன்று தீர்ப்பு கூறினார்கள். துப்பாக்கிச்சூட்டு நடத்தியது தப்பு. இந்த வழக்கை சி.பி.ஐ .விசாரிக்கும்படி உத்திரவிட்டார்கள்