“ஒட்டுத் திண்ணை கிடைச்சா போதும்.” என்கிற நிலையில்தான் இருக்கிறார்கள் அழகிரியின் ஆதரவாளர்கள்.
அழகிரியை கழகத்தை விட்டு கலைஞர் நீக்கி ஐந்தாண்டுகள் ஆகி விட்டது. அழகிரி அவ்வப்போது “திமுக தோற்கும் ” என்று சாபமிடுவதைப் போல பேட்டிகளை தட்டி விடுவார். பின்னர் அமைதியாகிவிடுவார். ஆதரவாளர்களும் அண்ணன் பின்னால் செல்வதில் பலனில்லை என கருதி கழகத்துடன் ஒன்றிவிட்டனர்.சிலர் அழகிரி பின்னால் இருக்கிறார்கள் அவர்களின் முக்கியமானவர் மதுரையைச்சேர்ந்த இசக்கி முத்து.
இவர்தான் மாவட்டங்களில் உள்ள அழகிரியின் ஆதரவாளர்களை ஒன்றிணைக்கும் வேலையில் இறங்கி இருக்கிறார். ஒன்று திரட்டி சென்னையில் கலைஞர் நினைவிடத்துக்குப் பேரணியாக செல்லத் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது. திமுகவை அசைத்துப் பார்க்கும் முயற்சியில் மத்திய மாநில அரசுகளின் உளவுத்துறை பங்களிப்பும் இருக்குமென எதிர்பார்க்கிறார்கள்.