தேசத்தின் நலன் காத்த தியாகச்செம்மல்களின் எண்ணிக்கை வெகுவாக அருகி விட்டது.அவர்கள் விட்டுச்செல்வது பிடி மண்ணோ, பிடி சாம்பலோ , இவைதான்! அவர்கள் நாட்டுக்காக ஆற்றிய ஆக்கப் பணிகள் கல் வெட்டாக இருந்தாலும் காலப்போக்கில் பிறந்த நாள்,நினைவு நாளன்றுதான் நினைவுக்கு கொண்டுவரப்படுகிறார்கள்.
அத்தகைய நிலைமை மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு நிகழ்ந்து விடக்கூடாது.
இவர் பிரதமராக பணியாற்றியபோதுதான் இந்தியாவின் அணுசக்தி வலிமையை உலகம் உணர்ந்தது.
நேர்மையின் சின்னமாக இருந்தார்.இந்திய தேசத்தின் வலிமை மாநிலங்களின் ஒற்றுமையில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தார். தமிழ்நாட்டைச்சேர்ந்த சின்னப்பிள்ளை என்கிற மூதாட்டியின் சீரிய சேவையைக் கண்டு காலில் விழுந்த மாமனிதர்தான் வாஜ்பாய். சிறந்த கவிஞர், பேச்சாளர். நிர்வாகி. சுத்தமான அப்பழுக்கற்ற பிரம்மச்சாரி. அவரது மறைவு நாட்டுக்கு பேரிழப்பு.
இவரது ஆட்சி காலத்தில் தமிழகம் பெருநன்மை பெற்றது. நாட்டு விடுதலைக்காக போராடியவர் என்பதாலோ என்னவோ இந்து என்பதை விட இந்தியன் என்கிற உணர்வு மேலோங்கி இருந்தது. சமதர்மம் அவரது தர்மமாக இருந்தது. அவரது மறைவுக்கு சினிமா முரசம் சார்பில் அஞ்சலி செலுத்துகிறோம்.
வாழ்க வாஜ்பாய் புகழ்.