அலாவுதீன் பூதத்தை ஏவி விட்டால் கூட சில படங்களின் கதையை கண்டுபிடிப்பது கஷ்டமோ கஷ்டம்.
” ஏன் சார் இப்படி என்று டைரக்டரிடம் கேட்டால் அடுத்தவன் சுட்ருவான் சார், டி.வி.சீரியல் ஆளுங்க காப்பி அடிக்கிறதுக்காகவே அலையிறாங்க.அதனாலதான் கதையை பத்திரமா வெச்சிருக்கோம் என்பார்கள்.
உண்மையிலேயே அவர்தான் ஏதாவது ஆங்கில படத்தைப் பார்த்து சுட்டிருப்பார்.
அரசியல் படம் என்றால் கேட்கவே வேண்டாம். ஆளும் கட்சியின் குடைச்சல் .சென்சாரில் மிரட்டல் ,சுண்டைக்காய் கட்சி எல்லாம் கேஸ் போடும். அச்சுறுத்தல், சவுக்கடி என சமாளிக்க வேண்டியதிருக்கும். இந்த பயம்தான் தளபதி விஜய் நடித்து வரும் சர்க்கார் படத்துக்கும்!
இது பக்கா அரசியல் படம். கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்பது தெரியும் .ஆனால் கதை?
லேசாக கசிந்திருக்கிறது.!
விஜய் பெரும் பணக்காரர். ஓட்டுப் போடுவதற்காக விமானத்தில் சொந்த ஊருக்கு வருகிறார். ஆனால் அவரது ஓட்டு யாராலோ போடப்பட்டு விட்டது. குறிப்பிட்ட கட்சிதான் கள்ள ஓட்டுப் போடுவதில் எம்டனுக்கும் எமன்!
இந்தியக்குடிமகனுக்கு இருக்கிற வலிமையான ஒரே ஒரு ஆயுதம் ஓட்டுதான். அந்த உரிமையையும் இழப்பதா என வெகுண்டு எழ தொடங்குகிறது யுத்தம். அந்த அரசியல் கட்சியின் மொத்த ஊழலையும் கண்டு பிடித்து மக்களுக்கு சொல்கிறார் தளபதி. இதுதான் கதையின் மையக்கருத்து என்கிறார் யூனிட்டை சேர்ந்தவர்.