தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 7-ம் தேதி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு சுமார் 40 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.இந்தநிலையில் அமெரிக்கா சென்ற விஜயகாந்த் அங்கு மிகுந்த உற்சாகத்துடனும், புதுத் தெம்புடனும் காணப்படும் புகைப் படங்கள்,அவரது அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியானது.கலைஞர் மறைத்த செய்தி கேட்டு விஜயகாந்த் கண்ணீர்விட்டு கதறி அழுத வீடியோ காட்சி வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு அமெரிக்காவிலிருந்து சென்னை வந்தார்.அங்கிருந்து வீட்டிற்குசெல்லாமல் தனது குடும்பத்தினருடன் நேராக சென்னை மெரினாவிலுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சமாதிக்கு சென்றார் சரியாக அதிகாலை 2.45 மணிக்கு திமுக தலைவர் நினைவிடத்தில் கண்ணீர் மல்க மலரஞ்சலி செலுத்தினார் அவருடன் அவரது மனைவி திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக துணைச்செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார் .சிகிச்சையில் இருப்பதால் நடையில் சோர்வு இருந்தது. குழந்தை போல கேவி அழுதது மனதை பிசைந்தது,