“இந்த ஞானப்பழம் வேணும்னா உலகத்தை யார் முதலில் சுத்தி வர்றாங்களோ அவங்களுக்குத்தான்” என்று அந்த செக்கர் வார்சடைப் பெம்மான் போட்டியை வைத்ததும் அப்படியே மயிலேறிப் பயணப்பட்டு விட்டார் சுப்பிரமணியர்..ஆனால் சிவனையும் பார்வதியையும் சுத்திவிட்டு “நீங்களே உலகம்”என பிள்ளையார் ஒரு பிட்டைப் போட்டு ஞானப்பழத்தை வாங்கிவிட்டார். அதைப் போன்ற பிள்ளையார்தான் 24 ஏ எம் ஸ்டுடியோ ராஜா.புதிய உத்திகளைக் கையாண்டு வருகிறவர்,
அவருடைய முந்தைய படங்களின் வசூல் சாதனையை தனது அடுத்த படம் உடைக்க வேண்டும் என்பது அவரது கொள்கை., இதற்காக ஒவ்வொரு படத்திலும் புதிய விளம்பர யுத்தியை கையாளுவது என்பதில் பிடிவாதமாக இருப்பவர்.
இவருடைய அடுத்த பிரமாண்டமான தயாரிப்பு “சீமராஜா”. சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன், லால், சிம்ரன், மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்க , டி இமான் இசை அமைப்பில், பொன் ராம் இயக்கத்தில், உருவாகி இருக்கிறது.செப்டம்பர் 13 ஆம் தேதி விநாயக சதுர்த்தி அன்று ரிலீஸ்.
இந்த படத்தின் விளம்பர பணிகளும் மிக பிரமாண்டமாக துவங்கி உள்ளது. அந்த வகையில் “கரோக்கி பூத்” என்ற விளம்பர யுத்தியை கையாள உள்ளனர் படக் குழுவினர். திரை அரங்குகளில் அமைக்க பட்டு இருக்கும் பிரத்தியேக பூத்துகளில் “சீம ராஜா” படத்தின் பாடல் வரிகளின் வீடியோ தொகுப்பு, மற்றும் டீஸர் இருக்கும். அந்த பூத்துக்கு வருகை தரும் ரசிகர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டி கொள்ளும் வகையில் அந்த பாடல்களையும், டீசருக்கு ஏற்றவாறு ‘டப்ஸ் மாஷ் ‘ செய்யலாம். இது யூ டியூப்பில் பதிவு செய்து வெளியிடப்படும். இதில் சிறப்பாக செயல்படுவோருக்கு இசை அமைப்பாளர் டி இமானுடன் ஒரு கலந்துரையாடல் வாய்ப்பு கிட்டும்.
” இதற்கு “சிங் அலாங் சீமராஜா” அதாவது சீமராஜாவுடன் சேர்ந்து பாடலாம் என பெயரிட்டு இருக்கிறார்கள்.
“விளம்பரங்கள் பொதுப்படையாக இருந்து விடக் கூடாது. தனி ஒரு ரசிகனை சென்று சேரும் விதமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு விளம்பரத்தில் ஒரு ரசிகனின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதே என் அபிப்ராயம்.அதை நோக்கி எங்கள் முதல் படிதான் இந்த “கரோக்கி பூத்”.என்கிறார் ராஜா. இது ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது.
.”பெரியவர்கள், குழந்தைகள் என்று இருவருக்கும் தனித்தனியே பூத்துகள் அமைத்து இருக்கிறார்கள்.குழந்தைகள் பூத்துக்கு “சீமராஜா மினி கரோக்கி பூத்” என பெயரிட்டு இருக்கிறார் ராஜா.