அதிகாலையில் கடலில் குளித்து மஞ்சளாடை அணிந்து அகிலத்தைக் காக்க பவனி செல்லும் ஆதவனைப் போல….
பணி முடிந்து மலையரசியைத் தழுவச் செல்லும் சூரியனைப் போல….
“இதோ புறப்பட்டுவிட்டேன் .இன்னும் இரண்டே நாட்கள். உங்கள் ஊரில் மட்டுமல்ல, உலகம் முழுக்க எனது திக் விஜயம். தயாரிப்பாளர் கலைப்புலியார் என்னை கண்ணும் கருத்துமாக வளர்த்து “சென்று வா. 6o வயது மாநிறமே…!சிறப்புகளைச் சொல்லி உங்கள் மூவரில் எவர் சிகரம் தொட்டிருக்கிறார் என கேட்டு வந்து சொல்லு “என அனுப்பி வைத்திருக்கிறார்.
“மாநிறத்து முதியவரே,பிரகாஷ்ராஜ் அய்யா! உமைப் பிடிக்காது போகுமோ?” எனப் பலரும்,
“சிங்கக்குட்டியே, சூரக்கோட்டை இளவரசு விக்ரம் பிரபுவே,.எங்கள் வீட்டுச் செல்லப் பிள்ளையை கண் கலங்க விடுவோமா” எனப் பலரும்,
“தென்பாண்டி ரத்தினமே ..சமுத்திரத்தின் கனியாகிய அதிசயமே.! முக்கடலும் சங்கமிக்கும் அதிசயம் போல வந்திருக்கும் மூவரையும் எங்களுக்கு பிடிக்கும் “என்று கலைப்புலி தாணுவிடம் சொல்லுங்கள் “என ஒட்டு மொத்த உலகத்து மக்கள் என்னை அனுப்பி இருக்கிறார்கள்.
இவண்,
உங்களின்
“6௦ வயது மாநிறம்.”
“