ஆராதிக்கவேண்டிய நகைச்சுவையை காலப்போக்கில் வக்கிரமாக மாற்றிவிட்டார்கள்.ஐயா, கலைவாணரே, அஞ்ஞானத்தை விரட்டுவதற்காக அந்த காலத்திலயே புதுமைகளை பாட்டில் சொன்ன உத்தமக் கலைஞன் நீங்கள்தான்.உங்களை ‘சினிமா முரசம்’ நினைவில் வைத்திருக்கிறது.வணங்குகிறது,

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் 61-வது நினைவு நாளையொட்டி இன்று (30.8.2018) அவரது திரு உருவ சிலைக்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர்எம். நாசர், நியமன செயற்குழு உறுப்பினர் மனோபாலா,பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
