தமிழ் மீதும் கலாசாரம் மீதும் நம்பிக்கை வைத்திருப்பதாக சில அரசியல் கட்சிகள் இங்கு சொல்லி வருகின்றன. இதை உண்மை என நம்பி கடல் கடந்து வாழும் தமிழர்கள் இன,மான உணர்வினால் பணம் அனுப்புகிறார்கள். தமிழ் வளரட்டுமே என்கிற நம்பிக்கை.
ஆனால் நடப்பதென்ன?
வளர்வதென்னவோ அந்த கட்சிகளின் தலைவர்கள் தான்!
ஆனால் சினிமாவில் இருக்கிற தமிழின உணர்வாளர்கள் தங்களின் பற்றினை செயல்வடிவில் காட்டிவிடுகிறார்கள்.
எடுத்துக்காட்டாக இசை அமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ்குமார் இனிமேல் தனக்கு முகவரி தந்த எழுத்துகளை தமிழில்தான் எழுதுவேன் என சொல்லிவிட்டார். ஆனால் ஊடகங்கள்,நாளேடுகள் அப்படி எழுதுமா?