சிம்புவின் ஜிக்ரிதோஸ்த் மகத் என்பது நாடறிந்த விஷயம்.
பிக்பாஸ் கூடத்திலிருந்து வெளியேறி வந்ததும் செல்லத் தட்டுகள், சிறப்பு விருந்துகள் என சிம்பு அமர்க்களப்படுத்தினார்.
ஆனால் அப்போது சிம்புவுக்குள் இன்னொரு ‘சக்தி’ இருக்கிறது என்பது வெளிப்படவில்லை. சென்ராயனுக்கும் சிம்புதான் சரணாலயம் என்பது இரு தினங்களுக்கு முன்புதான் வெளியாகியிருக்கிறது.
பல திசைகளில் பறக்கும் பறவைகளுக்கு ஒரு சரணாலயம் தேவைதானே.!
சிம்பு என்கிற சரணாலயத்தில் ஆன்மீகம்தான் ஆதாரபலமாக இருக்கிறது என்பது தற்போதுதான் பகிரங்கமாகி இருக்கிறது.
விதியின் பிடியில் இருந்து விடுபட்டு வந்த சென்ராயனுக்கு சிம்பு அளித்திருக்கும் புத்தகம் திருமூலர் எழுதிய திருமந்திரம்.
சைவத் திருமறைகளில் பத்தாவது திருமுறை. மூவாயிரம் பாடல்கள்.
யோகப் பயிற்சியைப் பற்றியும் திருமூலர் அற்புதமாக கூறி இருக்கிறார். மனம் லேசாகும். மது அருந்தாமலேயே மயக்கம் வரும் .துள்ளல் வரும். அவரது சூத்திரங்கள் அவ்வளவு எளிமையாகவும் அற்புதமாகவும் இருக்கும்.
இத்தகைய அறநூல்கள் சிம்புவிடம் இருப்பது அதிசயம்தான். தல அஜித்திடம் ஆத்திச்சூடி இருப்பதைப் பார்த்து தெளிவடைந்து விட்டாரோ!