சில நடிகைகள் புயல் மாதிரி வந்து போய் விடுகிறார்கள்.
சாவித்திரி பயோபிக் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து சாதனைப் பலகையை நட்டு வைத்து விட்டுப் போய்விட்டார். இப்படி சிலர் ஆங்காங்கே நட்டு வைத்திருந்தாலும் அவைகளைத் தாண்டி நயன்தாரா மட்டும் என்றும் அசைந்தாடும் தென்றலாக தென்னகத்தில் வீசுவதேன்?
மின்சாரமும் ,தண்ணீரும் தான் மாநிலங்களுக்கிடையில் நடக்கிற மல்லுக்கட்டு. ஆனால் கோலிவுட்,டோலிவுட், மல்லுவுட் இவைகளுக்கிடையில் நயனை பற்றி எந்த பைட்டும் நடப்பதில்லை. பிரமாண்டம், பெரிய நடிகர்கள் படம் என்றால் அவசியம் நயன் இருந்தாகவேண்டும் என்கிற நிலையில் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள்.
சிரஞ்சீவியின் தெலுங்குப் படம் 200 கோடி பட்ஜெட். ஷங்கரின் இந்தியன்.2 படம் 5௦௦ கோடி. அஜித்குமாரின் விசுவாசம் 80 கோடி, அர்ஜுன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் என 20 கோடி இப்படி 1000 ம் கோடிக்கு மேல் ஒத்தை ஹீரோயினை சுற்றிப் புரள்கிறது.
தயாரிப்பாளர்கள் நயனை நம்புகிறார்கள். பார்த்தும்மா!