கட்சிகளுக்கே கொள்கை, கோட்பாடுகள் என்பது வணிக அடிப்படையில் வகுக்கப்படுகிறபோது ‘டிரீம் வாரியர் பிக்சர்ஸ்’ மட்டும் வர்த்தக சினிமாவுக்குள் புகுந்து ஸ்விம் சூட் போடாமல் இருப்பதேன்?
நல்ல கதைகள்,திறமைசாலிகளுக்கு முதன்மை , ஆபாச கலப்பின்மை என கருத்து கந்தசாமிகளாக எஸ்.ஆர்.பிரகாஷ் பிரபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இருப்பது ஏன்?
இவர்களது அடுத்த படத்தின் நாயகி ஜோதிகா. கதை வசனம் இயக்கம் எஸ்.ராஜ். அக்டோபரில் படப்பிடிப்பு என தயாராகி விட்டார்கள். ஏனைய கலைஞர்கள் ,படப்பெயர் விரைவில் அறிவிக்கப்படுமாம்.
வாங்க ..வாங்க.!வலது காலை எடுத்து வையுங்க!