“ஓரினச்சேர்க்கை குற்றமில்லை, லெஸ்பியன் தவறில்லை” என உச்ச நீதி மன்றம் கருத்துச் சொன்னதற்கு பரவலாக ஆதரவும் எதிர்ப்பும்….!
குற்றங்கள் கூடாது என்பதற்காக சட்டங்கள் இருந்தும் நாட்டில் குற்றங்கள் எண்ணிக்கை குறைந்து விடவில்லை.
சின்னஞ்சிறார் பாலியல் வன்புணர்வுக்கு மரண தண்டனை என சட்டம் சொல்லியும் நின்று விடவில்லை.
வெளிநாட்டில் பாவம் பசு மாடு. அதையும் ஒரு காமுகன் விட்டு வைக்கவில்லை. தொடர்ந்து அதனுடன் ‘உல்லாசமாக’ இருந்திருக்கிறான். மாட்டிக்கொண்ட பிறகு அவன் என்ன சொல்லி இருக்கிறான் தெரியுமா?
“பெண்களுடன் உறவு கொண்டால் எய்ட்ஸ் வந்து விடும் எனப் பயந்தேன்!”
ஆக மனிதனின் மன இயல்பு கலாசாரம் கடந்து அது எங்கேயோ பயணித்துக் கொண்டிருக்கிறது. அதை தடுத்து விடமுடியுமா கரிகாலன். அவரது குமுறலை கேளுங்கள்.
“ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான இந்த கடினமான தீர்ப்பை சில திரையுலக சகோதர சகோதரிகள் ஆதரித்துப் பேசி வருவது மனவேதனை தருவதாக இருக்கிறது.
வளரும் இளம் தலைமுறைக்கு நாம் முன் உதாரணமாக திகழ வெண்டும் என விழைகின்றேன். தற்போதைய கணக்கீட்டில் இந்த ஒப்புததலுக்கும் ஓரிரு விழுக்காடாய் இருக்கும்.
இந்த இயற்கைக்கும், இறைபடைப்புக்கும் மாறான சேர்க்கை பத்து விழுக்காடாய், ஏன் நூறு விழுக்காடாய் மாறக்கூடிய பரிதாப சூழல் இருக்கிறது.
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒருபால் உறவு தவறு, எச்ஐவியும் பிற பாலின நோய்களையும் பரப்பும் என்று விளம்பரப்படுத்தப்பட்டதே, ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, எச்ஐவி பயந்துவிடுமா ?.
சுதந்திரம்….சுதந்திரம்… சுதந்திரம்… எது சுதந்திரம் ?, பயணத்தில் சிகப்பு விளக்கு எரிந்த பின்னரும் பயணிப்பது சுதந்திரமா ? நெரிசலோ, விபத்தோ ஏற்படாதா ?, இயற்கைக்கு மாறான உறவுப் பயணம் மன நெருக்கடியையோ, மரணத்துக்கு ஏதுவானவற்றையோ நிகழ்த்திவிடாதா,சிந்திப்போம்…சீர்படுத்துவோம்.”என்கிறார்