மனம் திறந்து பாராட்டும் குணம் தமிழ்ச் சினிமா வில் சிலருக்குத்தான் இருக்கிறது. அவர்கள் பொறாமைப் படமாட்டார்கள். அவர்களில் ஒருவர் தளபதி விஜய்.
இவரைப் பற்றி சீமராஜா சிவகார்த்திகேயன் என்ன சொல்கிறார்?
“விஜய் சார் பெரிய நடிகர்.மேடையில் பேசுகிற போது பேச வேண்டுமே என்பதற்காக எதையும் சொல்லி விடமாட்டார்.
மனசுக்குள் இருப்பதை அப்படியே சொல்லி விடுவார்.
“நீங்கள் குழந்தைகளைப் பிடித்து விட்டீர்கள் என்று என்னைப் பற்றி சொன்னது மிகப்பெரிய விஷயம் .
சமீபத்தில் பார்த்தபோது ‘செமையா ஆடுறீங்க’ என்றார்..
‘சும்மா சொல்லாதிங்க சார் ‘னேன் .எவ்வளவு பெரிய நடிகர் . அவரின் நடனத்தை ரசிக்காதவர்களே இல்லை.அவர் என்னை பாராட்டும்போது மகிழ்ச்சியாகஇருக்காதா , பெருமையா இருந்தது ” என்கிறார் சிவகார்த்திகேயன்.