கல்யாணம் நடந்திட்டாலே அந்த நடிகையை ஹீரோயினாக நடிப்பதற்கு தகுதி இல்லாதவள் என்பதாக திரை உலகம் ஒதுக்கிவிடும். இது காலம் காலமாக நடந்து வருகிறது. அந்த சிஸ்டத்தை உடைத்து விட்டதாகச் சொல்கிறார் சமந்தா .அக்கினேனி குடும்பத்து மருமகள்.
“கல்யாணத்துக்குப் பிறகு முக்கியமான கேரக்டர்கள் நடிகைகளுக்கு கிடைக்காதுங்கிறது பொய்யாகிப் போச்சு. எனக்கு நல்ல கேரக்டர்கள் கிடைச்சதே. அந்த படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட். பெண்கள்னா சாதாரண பர்னிச்சர் மாதிரி டிரீட் பண்ணிய காலம் மாறிடுச்சி! யூ டர்ன் கிரேட் ஐடியா” என்கிறார் சமந்தா.