கல்யாண வீட்டுக்கு வந்த விருந்தாளியிடம் கருமாதி பற்றி கேட்பது நல்லா இருக்குமா? கசப்பாகி விட்டது கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு!
விஸ்வசாந்தி பவுண்டேசன் திரட்டி இருந்த பேரழிவு வெள்ள நிவாரண உதவிகளை வழங்குவதற்காக கொச்சி சென்றிருந்தார் மோகன்லால்.
அவரிடம் ஒரு நிருபர் “கன்னியாஸ்திரி கற்பழிப்பு பற்றி “கேள்வி கேட்டார்.
“இந்த இடத்தில் இந்த கேள்வியைக் கேட்கலாமா? தேவையற்ற கேள்வி. இதற்கு பதில் சொல்ல முடியாது” என மறுத்து விட்டார் மோகன்லால்.
ஆனாலும் வீடு திரும்பிய மோகன்லால் தனது முகநூல் பக்கத்தில் வருத்தம் தெரிவித்திருக்கிறார்,
“ஏன் அப்படி சொன்னோம் என்பது வருத்தமாக இருக்கிறது. அந்த நிருபரிடம் மன்னிப்புக் கேட்கிறேன். அவருடைய சகோதரனாக நினைத்து என்னை மன்னிக்கட்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
பெரிய மனுசன்யா!