“சிலருக்கு இளம் வயது ,என்றாலும் வளம் இருக்காது. வற்றிப் போன அருவியில் முட்டி மோத பாறைகளா.!
சிலர் வளமிகுந்து இருப்பார்கள் வாலிபம் தொலைந்திருக்கும். வண்டியா என்ன முன்பாரத்தை இறக்கி வைக்க.?
முற்றிய தேங்காய் சட்னிக்கு உதவும். வாய்க்கு ருசி வழுக்கைதானே.!
வளைந்து நின்றாலும் இளமைத் திமிர் மறைந்து தெரிந்தாலும் வாழைத் தொடையழகு யாருக்கு வரும் , வாலைக்குமரியே!
நின் மேனிப் படிமம் உனதல்லவே.! மதுரை ஆலயத்தில் இரவல் பெற்றதா?”
வாசகப் பெருமக்களே மன்னிக்க.! கத்ரினா கைப் படத்தை எடுத்து வைத்திருந்தேன். ஆபீஸ் பையன் எழுதிவிட்டான் இதை.! விரைவில் என் இடத்துக்கு வந்து விடுவானோ என்னவோ?