ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபு தேவா,தமன்னா ஆகியோரது நடிப்பில் வெளியான படம், ‘தேவி’. இந்த படம் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து இவர்களின் கூட்டணிஇரண்டாவது முறையாக ‘லக்ஷ்மி’ படத்துக்காக மீண்டும் இணைந்தது . சமீபத்தில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில்,ஏ.எல்.விஜய்யும், பிரபு தேவாவும் மூன்றாவது முறையாக ‘தேவி’யின் இரண்டாம் பாகத்துக்காக இணைந்துள்ளனர். தற்போது ‘தேவி’ படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு இன்று மொரீஷியஸில் தொடங்கியுள்ளது.இதில், கோவை சரளா முக்கிய கேரக்டரை ஏற்றுள்ளார்.இதற்கான அறிவிப்பை பிரபு தேவா புகைப்படத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .இப்படத்தின் கதாநாயகியாக மீண்டும் தமன்னா தொடருவாரா ,அல்லது அவருக்குபதிலாக வேறு நடிகை நடிப்பாரா என்பது குறித்த விவரம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.