விஜயகுமார் -மஞ்சுளா தம்பதியினரின் 3 வது புத்திரி வனிதா. போலீசுக்கும் வனிதாவுக்கும் நல்ல தொடர்பு. !முதல் கணவருக்கு விடுதலை கொடுத்தாகிவிட்டது. இரண்டாவது கணவர் என்பவரும் இடையிலேயே சென்று விட்டார். மூன்றாவதாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்தார் என்று சொல்லப்பட்டது.
தற்போது என்ன பிரச்னை என்றால் ஆலப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வாடகைக்கு இருந்த வனிதா காலி செய்ய மறுக்கிறார் என்றும் சொந்த வீடு என உரிமை கொண்டாடுவதாகவும் நடிகரான அப்பா விஜயகுமார் போலீசில் புகார் செய்திருக்கிறார். மதுர வாயில் போலீசார் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.செய்தி சேகரிக்கச்சென்ற நிருபர்களோ அடி வாங்காமல் பின் வாங்கிச் சென்றதுதான் பரிதாபம்.