வட சென்னை என்றால் சினிமாக்காரர்களுக்கு வடை பாயாசம் சாப்பிடுவது மாதிரி .! சண்டை பிடிக்கலாம் ,உயர்தர,நடுத்தர,மற்றும் சாதாரண பிரிவினரின் காதலையும் சொல்லலாம். வசதியான களம். இந்த வடசென்னை பின்னணியில் இயக்குநர் கோபி நைனார் ஒரு கதை பண்ணியிருக்கிறார்.
ஆர்யாதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் ஜெய் நடிப்பதாக உறுதி ஆகி இருக்கிறது. ஆர்யாவின் இடப் பெயர்ச்சிக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை .விரைவில் அறிவிப்புடன் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.
அறம் படத்தின் இரண்டாம் பகுதி கதை தயாராக இருக்கிறது.ஆனால் நயன்தாராவின் தேதிகள் அடுத்த வருடம்தான் என்பதால் கோபி நைனார் வடசென்னை படத்தை கையில் எடுத்திருக்கிறார்.