தளபதி விஜய்யின் முதல் பாடலை அவரது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்தனர். முதலிரவுக்குப் போன புருஷன் திருப்தி இல்லாமல் திரும்பிய கதை மாதிரி ஆகிப் போச்சு அவர்களின் கதை.!
‘மெர்சல் ‘படத்தின் ‘ஆளப்போறான் தமிழன்’ ரேஞ்சுக்கு தூக்கி அடிக்கும் என எதிர்பார்த்திருந்தார்கள் .350 மில்லியன் ரசிகர்கள் கேட்ட பாடல் ஆச்சே!
“பாட்டு வரிகளே புரியல சார்” என ரசிகர்கள் புலம்புகிறார்கள். சென்னை சிலாங்கில் விட்டு அடிச்சா பட்டையை கிளப்பும் என்று ‘சிமிட்டாங்கறான்’ பாடலை எழுதியிருக்கிறார்கள்.
“அய்யா அது வசனமா கேக்கிற போது சிலுத்துக்கிற மாதிரிதான் இருக்கும்.’ வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி உட மாட்டேன் ,ஜாம் பஜார் ஜக்கு நா சைதாப்பேட்டை கொக்கு’காமடிக்கு ஷோக்கா கீது! ஆனா தமிழகமே எதிர்பார்க்கிற ஹீரோவுக்கு ?
பெரும்பாலான ரசிகர்கள் ரொம்பவே நொந்து போயிருக்கிறார்கள். சிலருக்கு தங்கள் தளபதி படத்தின் பாடலை குறை சொல்லக்கூடாதே என்கிற ஆதங்கம் நிறையவே இருக்கிறது.