“ஆளப்போறான் தமிழன்” பாட்டுக்கு இணையாக ‘சிம்ட்டாங்காரன்”பாடலை சொல்ல முடியாது என்றாலும் தங்களின் தளபதியை விட்டுக்கொடுப்பார்களா அவரது படையினர். “சிம்ட்டாங்காரன்” என்கிற அழகிய தமிழுக்கு பாடலாசிரியர் விவேக் அர்த்தம் சொல்ல வேண்டியதாகி விட்டது. பயமற்றவன்,துடுக்கானவன், கவர்ந்து இழுப்பவன் என்பதாக சொல்லி இருக்கிறார்.
தளபதி விஜய்க்கு வெற்றியைத் தவிர வேறு எதுவும் வந்து விடக்கூடாது என்கிற உற்சாகத்துடன் பாடலுக்கு லைக்ஸ்களை வாரி குவித்து விட்டார்கள் .நான்கு மணி நேரத்தில் ஒரு மில்லியனைத் தாண்டி விட்டது.இன்னும் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது .தற்போது ஐந்து மில்லியன்.மெர்சல் பாடலை தாண்டினால்தான் அவர்களுக்கு சந்தோசம். சன் பிக்சர்சும் அந்தப் பாடலை தங்களின் ஒலி,ஒளி பரப்பு சாதனங்களின் துணையுடன் சாதனை படைத்து விடும்.