பொய் பேசாத அரசியல்வாதிகளுக்கு இந்தியாவின் உயர்தர விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்தால் வாய் பேச முடியாதவர்களுக்குத்தான் அதிர்ஷ்டம் அள்ளிக் கொண்டு போகும்.
அத்தனை நல்லவர்கள் அரசியல்வாதிகள்!
அரசியல்வாதிகள் போய் பேசாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி பெரியாரிஸ்ட் சத்யராஜ் சொல்கிற வழிதான்!
‘நோட்டா’பட விழாவுக்கு வந்திருந்தவர்களில் சற்று அரசியல் பேசிய மனிதர் இவர்தான்!
“போய் பேசினால் மைக் உடஞ்சு சிதறும்னா அரசியல் வாதிகள்ல ஒருத்தன் பேச வரமாட்டான். ‘அமைதிப் படை’ மாதிரி அரசியலில் எறங்கி அடிக்கனும் .அதுக்கு என் தலைவர் மணிவண்ணன் மாதிரி தில் இருக்கணும்.
இந்த படத்தில்தான் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் நடிச்சிருக்கேன்.இந்த 41 வருசத்தில் இதுதான் முதல்தடவையா அப்படி நடிச்சிருக்கேன். பாகுபலியில் தான் அதிக மேக்கப். ‘நீங்க பத்து நாளா பைட் பண்ணி களைச்சிருக்கிங்க.அதனால முகத்தில தூசு இருக்கணும்னு சொல்லி முகத்தில் தூசி ஊதுன கதை எல்லாம் இருக்கு.
அநியாயத்துக்கு சென்டிமென்ட் பாக்கிறதுன்னா நம்ம தமிழ் சினிமாதான்! பொள்ளாச்சியில் சின்னத்தம்பி குஷ்பூ அந்த சன்னல் பக்கம்தான் நின்னாங்க.அந்த சன்னல் பக்கமே நீங்களும் நில்லுங்கன்னு சொல்ற ஆட்கள்தான் நம்ம ஆளுங்க”என்றார் சத்யராஜ்.