“நல்ல நடிகன்யா.. மொழி தெரியலேன்னாலும் சீனை புரிஞ்சிக்கிட்டு எக்சலண்டா பெர்பார்ம் பண்ணிருவான் நானா படேகர்..ஐ லைக் ஹிம் சோ மச்!” என்கிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
இவர் நம்மூர்க்காரர் .பாலிவுட் பலே கில்லாடியைப் பத்தி என்ன தெரியும் என்று நம்மை யோசிக்க வைக்கிறார் பாலிவுட் பச்சைக்கிளி தனு ஸ்ரீ தத்தா.
என்ன சொல்லுது இந்தப் பொண்ணு?
“மோசமான ஆளு சார் அந்தாளு. பல வருஷத்துக்கு முந்தி நானா படேகருடன் ஓ,கே.ன்னு ஒரு படம் பண்ணுனேன். ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே மோசமா நடத்தப்பட்டேன். நானா பொண்ணுகளை மோசமா திட்டுவார். அடிப்பார்.மான பங்கப்படுத்துவார்.அவரைப் பத்தி இன்டஸ்ட்ரிக்கு நல்லாவே தெரியும். அவருக்கு இணக்கமா நடக்கலேங்கிறதுக்காக ஓ.கே. படத்தில் இருந்து என்னை தூக்கினாங்க. அவருக்கு பிஆர்ஓ.வாக இருக்கிற ஆளுங்க நானாவை பத்தின தப்பான நியூஸ் வராம பாத்துக்குவாங்க..
இப்படிப்பட்ட ஆளுடன் அக்ஷய் குமார், ரஜினி இவங்கல்லாம் நடிக்கலாமா?”என்று கேட்டிருந்தார் தனுஸ்ரீ.
“என்ன சார் அந்தப் பொண்ணு தப்பான ஆளுன்னு சொல்லுது?” என்று நானாவிடம் கேட்டதற்கு அந்த ஆளு சொன்ன பதில் இருக்கே? உலகமே இருந்து போன மாதிரி இருந்ததுங்க.!
“பாலியல் பலாத்காரம்னா என்ன,”?
அடேங்கப்பா…அந்த காரம் ஸ்வீட் கடையில கிடைக்கும்னு கேட்காம விட்டாரே!