
இவருக்கும் நடிகை அமலாபாலுக்கும் தெய்வதிருமகள் படத்தின் போது காதல் மலர்ந்தது. கடந்த 2014-ம் ஆண்டில் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள். ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017-ம் ஆண்டில் விவாகரத்தும் செய்துகொண்டனர்.விவாகரத்துக்கு பிறகு இருவரும் பரஸ்பரம் திரைப்படத்துறையில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்,இந்நிலையில் இயக்குனர் விஜய்க்கு அவரது பெற்றோர்கள் மீண்டும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து,தீவிரமாக பெண் தேடி வந்தனர்,அதன்படி,
சென்னை தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு – அனிதா தம்பதியினரின் மகள் ஐஸ்வர்யாவை விஜய்க்கு பேசி முடித்தனர்.தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர், ஐஸ்வர்யா தற்போது எம்.பி.பி.எஸ்.’ படித்து முடித்து ஒரு வருடம்மருத்துவமனை ஒன்றில் பிராக்டிகல் பயிற்சி பெற்று வருகிறார்,இவர்களது திருமணம்
அடுத்த மாதம் 11-ந் தேதி, சென்னையில் நடக்கிறது. திருமணத்துக்கான ஏற்பாடுகளை இரு வீட்டினரும் இணைந்து செய்து வருகின்றனர்.