தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் தேர்தல் இன்று காலை தி.நகரில் உள்ள அதன் அலுவலகத்தில் நடந்தது.இத்தேர்தலில் ,தலைவர் பதவிக்கு, நடன இயக்குனர்கள் ஷோபி பவுல்ராஜ் மற்றும் தினேஷ் போட்டியிடுகின்றனர். துணை தலைவர் பதவிக்கு, நடன இயக்குனர்கள் லலிதா ஷோபி மற்றும் சுஜாதா போட்டியிடுகின்றனர். பொதுச் செயலாளர் பதவிக்கு, சிவா மற்றும் கார்த்திக் பொருளாளர் பதவிக்கு, செந்தில்குமார் மற்றும் சதிஷ் ஆகியோரும், இணைச்செயலார் பதவிக்கு, ரவிதேவ் மற்றும் ஆசாத் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர்களாக அசோக்ராஜ்,சலபதி ,தாஸ்,சரஸ்வதி,விஜயலக்ஸ்மி உள்பட பலர் போட்டியிடுகின்றனர்.தேர்தல் அதிகாரியாக ஒய்வு பெற்ற நீதிபதி கே.பாலசுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தொடர்ந்து மாலை 5 மணி வரை நடக்கிறது.வாக்கு எண்ணிக்கை இன்று இரவே நடத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களின் விபரம் உடனடியாக அறிவிக்கப்படவுள்ளது.
இச் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நடிகர்கள் கமல்ஹாசன், பிரபுதேவா, ராகவா லாரன்ஸ் நடிகை சீமா காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பல திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் இன்று காலை முதலே வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.