காலங்களுக்கு தகுந்தாற்போல நாகரீகம் மாறுவதைப் போல சூழல்களுக்கு ஏற்ப கொள்கைகளை மாற்றிக் கொள்வது அரசியல்வாதிகளின் உரிமை.
பதவி கிடைக்குமானால் எதிர்க்கட்சிக்குப் போகலாம்.
ஆதாயம் கிட்டுமானால் துரோகிகளையும் துதிக்கலாம் .
காலம் காலமாக பார்த்துக் கொண்டிருப்பதுதான்.
இவையெல்லாம் சமுதாயத்தை சீரழிப்பவை ,ஓட்டு மொத்தமாக வேரும்,வேரடி மண்ணுமாக அழிக்கப்பட வேண்டியவை என சொல்லிக்கொண்டே முரண்பாடாக செயல்படுகிறவர்களை என்னவென சொல்வது?
இதற்கு சரியான தீர்வு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தான் சொல்லவேண்டும்!
சர்க்கார் படம் வெளியான நேரத்தில் ஆளும் கட்சியினரான அதிமுகவினர் காவல் துறையின் கண்பார்வைக் கருணையுடன் தளபதி விஜய்யின் கட் அவுட்கள்,பிளக்ஸ் பேனர்களை கிழித்து,உடைத்து துவம்சம் செய்தார்கள்.
விஜய்க்கு இருந்த பொறுப்புணர்வு ,வன்முறையில் இருந்து அவரது ரசிகர்களை காப்பாற்றுகிற கடமை இவை காரணமாக முதல்வர் எடப்பாடியாரை பார்த்துப் பேசுவதற்கு அனுமதி கேட்டிருந்தார்.
இதற்கு செந்தமிழ்ச் செல்வர் சீமான் என்ன சொல்லியிருந்தார்?
“முதல்வரிடம் சென்றது சரியில்லை.சர்காரில் அரசியல் வசனங்களை பேசினார் என்றால் ஆமா பேசினேன்னு சொல்லிவிட்டு போக வேண்டியதுதானே!
இதை விட்டுட்டு முதல்வரை சந்திக்க நேரம் கேட்பது, ஜெயலலிதா மீது மரியாதை வைத்திருந்தேன் என்று சொல்றதெல்லாம் அவமானம். எடப்பாடிக்கெல்லாமா பயப்படறது? இதுல ஒரு விரல் புரட்சி வேற!?என் தம்பி சிம்புதான் சூப்பர் ஸ்டார் “ என்று அன்று பேசியிருந்தார்.
அதே சீமான்தான் பின்னர் “ரஜினிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் தம்பி விஜய் தான். விஜய்யைப் போல தம்பி சிம்புவும் அசாத்திய திறமைசாலி.குறைகளை களைந்து அவரை முன்னுக்கு கொண்டுவரவேண்டிய பொறுப்பு இருக்கிறது “என பேசியிருக்கிறார்.
இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்?