பொதுவாக பெண்கள் வளர்ந்த பிறகு தங்களின் முடியை காணிக்கையாக மழிப்பதற்கும் தயங்குவார்கள். பூ முடி என சொல்லி முன் முடியை மட்டும் வெட்டி சாமிக்கு காணிக்கையாக செலுத்துவார்கள். ஆனால் இடுப்புக்கும் கீழாக வளர்ந்த நீண்ட முடியை அப்படியே மொட்டை அடிப்பது என்றாலும் எந்த பெண்ணுக்கும் வலிக்கவே செய்யும்.!
ஆனால் அபர்ணாவுக்கு?
இவர் கேரளத்தில் பெண் போலீசாக பணியாற்றி வருகிறார். புற்று நோய் நோயாளிகளுக்கு விக் செய்வதற்காக தனது நீண்ட முடியை மழித்து மொட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்.
“என்னால் நிதி உதவிதான் செய்ய முடியாது.ஆனால் முடியைத் தானமாக தரலாம் அல்லவா! அதனால் உயர் அதிகாரியின் அனுமதி பெற்று கொடுத்திருக்கிறேன்” என்கிறார் அபர்ணா.
வாழ்க அபர்ணாவின் மனிதநேயம்.!