எதை எதனுடன் ஒப்பிட்டு பேச வேண்டும் என்பதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் ,இல்லாவிட்டால் மிகவும் கேவலமாகி விடும்.!
சிலர் தங்களை அறிவாளியாக காட்டிக்கொள்வதற்காக மேடைகளிலேயே தவறான தகவல்களைத் தந்து விடுவார்கள். அதிமுக மந்திரிகளில் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை உதாரணமாக சொல்லலாம்.
தற்போது அந்த பட்டியலில் கேரள காங்கிரஸ் எம்.பி.யின் மனைவியும் சேர்ந்திருக்கிறார்.
அவரது பெயர் அன்னா லின்டா.
காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிபி ஈடன். இவரது மனைவிதான் அன்னா லின்டா.
இவர் தனது முகநூல் பதிவில் ‘விதி’யையும் ‘கற்பழித்தலை’யும் உவமைப் படுத்தி ஒரு பதிவு போட்டிருந்தார்.
“விதி என்பது கற்பழிப்பு மாதிரி! நீங்கள் அதை எதிர்த்துப் போராடலாம். முடியாவிட்டால் அதை ஏற்றுக்கொள்ள முயற்சி பண்ணுங்கள்” என சொல்லி இரு வீடியோக்களையும் பதிவு செய்திருந்தார்.
அறியாமையின் விளைவு என பலத்த எதிர்ப்பு வந்ததால் அந்த பதிவை எடுத்து விட்டார்.
ஆனால் இதை ஆதரிப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
வன்புணர்விலிருந்து மீண்டவர்கள் எவரேனும் உண்டா?என்கிறார்கள்.