ஜால்ரா தட்டி சலுகைகளைப் பெறுவது ஒரு வகை ,உண்மையைச் சொல்லி அதனால் வருகிற எதிர்விளைவுகளை சந்திப்பது இன்னொரு வகை.
இதில் இரண்டாவது வகையை சேர்ந்தவர் இயக்குநர் ,ஒளிப்பதிவாளர் ,தயாரிப்பாளர் விஜய் மில்டன்.
அவர் இன்று பதிவிட்டிருக்கிற செய்தியில் துணிவும் உண்மையும் உரத்துப் பேசுகின்றன.
“சமூக பாதுகாப்புக்காக நாம் தனித்திருப்பதை அதீதமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் எண்ணங்களில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது.
தீண்டாமை , குடும்ப பாதுகாப்பு என்ற போர்வையில் நம்முள் இறங்கிவிட்டது.
மனிதர்களை மந்தைகள் போல் கூட்டமாக்கி பூச்சிமருந்து தெளிப்பதையும்சொந்த ஊர்களுக்கு திரும்ப விடாமல் கொட்டடியில் அடைப்பதையும் சரிதானென்று நினைக்க ஆரம்பித்து விட்டோம்.
ஏற்கனவே கயிறு கட்டியவன் கட்டாதவன் ம..புடுங்கியவன் பிடுங்காதவன் என வட்டம்போட்டுக்கொண்ட நாம் மேலும் சுருங்கி சுயநலமே பொதுநலம் என்றாகிக்கொண்டிருக்கிறோம்.
சகமனிதர்களை -ஏன் -நண்பர்களை கூட அவ நம்பிக்கையோடு தூரத்தில் வைக்க நேரிட்டு விட்டது.
நம் பிள்ளைகளின் மனதில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என அச்சமாக இருக்கிறது.
இந்த ஆரவாரமெல்லாம் அடங்கிய பிறகு என்றேனும் எங்கேனும் சாலை ஓரம் நாம் மயங்கிக்கிடந்தால் அப்படியே விட்டு விலகி ஒதுங்கிச்செல்வதுதான் social responsibility என அவர்களுக்கு போதித்துக்கொண்டிருக்கிறோம்.
சமூக இடைவெளி என்பது மனதுக்குள் மனிதருக்குள்நிரந்தரமாகிவிடுமோ என்று அச்சம் வருகிறது. “என்கிறார் இயக்குநர் -ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்.