பாலிவுட்டின் சிறந்த குணசித்திர நடிகர்களில் இர்பான்கான் முக்கியமானவர். இவர் பெருங்குடல் புற்று நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார் .லண்டன் சென்று சிகிச்சை பெற்று வந்தார். மும்பை திரும்பியதும் கோகிலா பென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சை தொடர்ந்தது.
53 வயதாகும் இர்பான்கான் உடல் நிலை இன்று மோசமாகியது.இதனால் அவரது குடும்பத்தினருக்கு தகவல் சொல்லப்பட்டு அனைவரும் வந்து சேர்ந்த பின்னர் உயிர் பிரிந்திருக்கிறது.
இந்த கொரானா ஊரடங்கு காரணமாக முடங்கிப் போய் இருக்கும் காலகட்டத்தில்தான் அண்மையில் இவரது அம்மா காலமானார்.ஜெய்ப்பூரில் இறந்ததால் இர்பானால் போக முடியவில்லை.
இர்பானின் மரணம் பாலிவுட்டை அதிர்வுக்குள்ளாக்கி இருக்கிறது அமிதாப் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருக்கிறார்.