பிரியா பவானி சங்கர். சின்னத்திரை தந்த சிங்காரி .
‘ மேயாதமான்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் . .கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து,’குருதி ஆட்டம்’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘பொம்மை’, ‘இந்தியன் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவரது சமூக வலைதளத்தில் ஒரு நிகழ்வை பதிவு செய்திருந்தார்.கிரிவலம் போயிருந்த அனுபவம். அவர் எழுதியிருந்ததை நீங்களும் பாருங்கள்.!
“சித்ரா பௌர்ணமி இரவு! போன வருஷம் இதே நாள்,
‘கிரிவலம் போனா, மூனு மாசத்துல வேண்டிக்கிட்டத கடவுள் கண்டிப்பா குடுப்பார்’னு ப்ரண்ட் சொன்னத நம்பி மனசு நிறைய ஒரே வேண்டுதல சுமந்துகிட்டு இரவோட இரவா பௌர்ணமிய தொரத்திக்கிட்டு திருவண்ணாமலை போனேன்.
கடவுள் கேட்டத குடுக்கலனாலும் பரவாயில்லை வேண்டுதலை கிழித்து என் முகத்துலயே எறிந்து கை தட்டி சிரித்தார்.
. ஒரு வருஷம் எப்படி போச்சுன்னே தெரியல. ரெண்டு சித்ரா பௌர்ணமிக்கு இடையே வாழ்க்கை மட்டுமில்ல உலகமே மாறிடுச்சு.
நான் மட்டும் இல்ல, உலகமே தனிமையில்.!
ஏனோ கிடைத்த கைகளை பற்றிக்கொண்டு, கிடைத்த தோளில் ஒட்டிக்கொண்டு அவசரவசரமாக அடுத்த வாழ்க்கைக்கு தயாராக இந்த தனிமை தூண்டவில்லை.
தனிமையில் நிற்க நமக்கு ஏன் இவ்வளவு பயம்? பதற்றம்?
கேட்டதை தராமல் நல்லதை தந்த கடவுள் மேலயும் சித்ரா பௌர்ணமி மேலயும் கோவம் !
தனிமையின் வெளிச்சத்தில் நிதானமாக தெளிவாக, எந்த எதிர்ப்பும் இன்றி, கிடைத்ததே என்று எந்த பிடிப்புமின்றி நான். கிரிவலம் போகாமல், முன் எப்பொழுதையும் விட அமைதியாக தனிமையின் கம்பீரத்தோடு என் வீட்டு மாடியில் சித்ரா பௌர்ணமி.மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும் .வலித்து மரத்து அடங்கிய பின் வரும் தெளிவு அழகு “என பதிவிட்டு இருந்தார் ( யம்மா ஒன்னும் புரியலேம்மா!)
இதையடுத்து, ப்ரியா பவானி சங்கர் தனது நீண்ட நாள் காதலரான ராஜைப் பிரிந்துவிட்டார். இருவருக்கும் இடையேயான காதல் முறிந்து விட்டது என்றும் இணையதளங்களில் செய்திகள் வெளியாகின.
இதற்கு அளிக்கும் வகையில் ப்ரியா பவானி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதியபுகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
செல்ஃபோனை பார்த்து, சிரித்தபடி அவர் வெளியிட்டிருக்கும் போட்டோவுடன், ”என்னை பற்றிய கிசுகிசுக்களை படிக்கும் போது இப்படிதான் இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.