ரஜினிகாந்த் நடித்து வரும் எந்திரன் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு தற்போது டெல்லியில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. ஜவகர்லால் நேரு மைதானத்தில் கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெறுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும், இந்தியன் கால்பந்து லீக் போட்டிகளில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுவது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டதாகவும், ரஜினிகாந்த் மற்றும் அக்சயகுமார் ஆகிய இருவரும் இந்த இரு அணிகளின் கேப்டன்களாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.மேலும் இந்த படப்பிடிப்பில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்ததாகவும், கால்பந்து அணியின் உரிமையாளர்களாக இவர்கள் இருவரும் நடித்திருக்க கூடும் என்றும் தெரிகிறது.ஏற்கனவே இந்த படத்தின் வில்லன் வேடத்திற்கு அமிதாப்பச்சனை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது