பாலாவின் இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யா,விஷால் இருவரும் மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை ஆனந்த்ஷங்கர் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் விஷால் ஜோடியாக மிருணாளினி மற்றும் ஆர்யா ஜோடியாக சமீரா ரெட்டி ஆகியோர் நடித்து வருகின்றனர் இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு நாளை 25-ம் தேதி மாலை 5 மணிக்கு விஷால், ஆர்யா ஆகிய இருவரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட உள்ளனராம்.