ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் டாக்டர் ஏ.ஜோசப் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கே.செந்தில் செல்வானந்த், தேனி மாவட்டச் செயலாளர் ஆர்.கணேசன், உள்ளிட்ட சிலர் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இது தமிழக அரசியல் வட்டாரத் த்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று காலை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம். ஆனால் அதற்கு முன்பு ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். எந்த கட்சியில் இணைந்தாலும் அவர்கள் எப்போதும் ரஜினி ரசிகர்கள் தான் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது . இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது