உண்மைச் சம்பவங்களைப் படமாக்குவது எப்போதுமே அவ்வளவு எளிதான விஷயமல்ல. அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பார்க்கும் போது, அவர்களது நினைவுகள் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். அப்படியொரு உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி வெளியான ‘க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படத்தை இயக்கிய விருமாண்டி. திரையுலக பிரபலங்கள் பலராலும் பாராட்டப்பட்டார்.
இப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் விருமாண்டி,தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார் . இதுவும் ஒரு உண்மைச் சம்பவம் தான் என்கிறார் . அதாவது 1975-ம் ஆண்டு ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்குகிறார் விருமாண்டி.இந்தக் கதையைக் கேட்டவுடனே, நடிப்பதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார் சசிகுமார். ஏப்ரலிலிருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்கிறார்.இப்படத்தை பரதன் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆர்.விஸ்வநாதன் தயாரிக்கிறார்.
இந்தப் படத்துக்குப் பாடலாசிரியராக வைரமுத்து, ஒளிப்பதிவாளராக என்.கே.ஏகாம்பரம், எடிட்டராக டி.சிவாநாதீஸ்வரன், இசையமைப்பாளராக ஜிப்ரான் ஆகியோர் பணிபுரிகிறார்கள்.வரும் ஏப்ரலில் படப்பிடிப்பைத் தொடங்கி, இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். தற்போது சசிகுமாருடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது.