
சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்றபோது ரஜினிக்கு ரத்த அழுத்த பிரச்சினைகள் ஏற்பட்டது.இதையடுத்து அங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் ரஜினி. சமீபத்தில் மீண்டும் ஐதராபாத் சென்று படப்பிடிப்பில் பங்கேற்றார்.தான் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் முடித்து கொடுத்து விட்டு சென்னை திரும்பிய அவர், கடந்த 19-ம் தேதி தனது இரண்டாவது மகளான சவுந்தர்யாவுடன் அமெரிக்காவுக்குப் புறப்பட்டு சென்றார்.அமெரிக்காவில் ‘மின்னசோட்டா’ மாகாணத்தில் உள்ள ‘ராச்செஸ்டர்’ என்னும் நகரில் இருக்கும் ‘மயோ’ மருத்துவமனையில் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டார். அங்கே அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன..மகள்கள் ஐஸ்வர்யாவும், சவுந்தர்யா மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோர் ரஜினிகாந்துடன் உள்ளனர். ரஜினி இ்ன்னும் 3 வாரங்கள் அமெரிக்காவில் தங்கி இருப்பார் என்கிறார்கள்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றது குறித்து நடிகை கஸ்தூரி தனது டிவீட்டர் பக்கத்தில் சில கேள்விகளை பதிவிட்டுள்ளது பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது,, “கடந்த 2021 மே மாதம் முதலே அனைத்து இந்திய குடிமக்களுக்கும் கொரோனா காரணமாக இந்தியாவில் இருந்து நேரடியாக பயணம் செய்ய அனுமதியில்லை என்று அமெரிக்கா தடை செய்துள்ளது. இதில் மருத்துவ விதிவிலக்குகள் எதுவும் வழங்கப்படவில்லை.
இந்த நேரத்தில் ரஜினிகாந்த் மட்டும் எப்படி அமெரிக்காவுக்கு பயணம் செய்தார்..? அவர் திடீரென அரசியலில் இருந்து பின் வாங்கினார். இப்போது இப்படி அமெரிக்காவில் தடையுத்தரவு உள்ள நிலையிலும் சென்றிருக்கிறார். இந்த பயணம் எப்படி ரஜினி ஸாருக்கு மட்டும் சாத்தியமானது. இதில், தெளிவான தகவல்கள் இல்லை. ரஜினி சார், தயவு செய்து இதை தெளிவுபடுத்துங்கள்.தெளிவுபடுத்
ரஜினிகாந்த் இந்திய அரசிடம் இருந்து மருத்துவ விலக்கு பெற்றிருக்கலாம் என்று பலர் கூறுகிறார்கள். இது இன்னும் கவலை அளிக்கிறது. இந்தியாவில் இருக்கும் சிறந்த மருத்துவமனைகளால் சிகிச்சையளிக்க முடியாத அளவிற்கு அவரது உடல்நிலையில் அப்படியென்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது..?ரஜினி சிகிச்சை பெற்று வரும் மயோ கிளினிக் இருதய பராமரிப்புக்குத்தான் பெயர் பெற்றது. நான் அதைப் பற்றி எவ்வளவு அதிகமாக நினைக்கிறேனோ, அவ்வளவு மோசமாக இருக்கிறது.
மேலும் ரசிகர்களே, தயவு செய்து ‘ரஜினிகாந்திற்கு இந்த விதிகள் பொருந்தாது’ போன்ற விஷயங்களைச் சொல்ல வேண்டாம். அது மிகப் பெரிய விஷயம். அப்படி ஏதேனும் இருந்தால், அத்தகைய மிகப் பெரிய ஐகான்கள் சட்டத்தை மதிக்கும் குடிமகனாக வருவதற்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்…” இவ்வாறு நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.