“அதென்னங்க, எந்த புருஷனாவது எம்பொண்டாட்டி என்னை அடிக்கிறா ,செக்ஸ் டார்ச்சர் பண்றா ,போதையை போட்டுக்கிட்டு இம்சை பண்றான்னு போலீஸ்ல புகார் பண்ணிருக்கானா ?ஆனா பொம்பளைங்க மட்டும்தான் இப்படி அதிகமாக கம்ப்ளெயிண்ட் பண்றாங்க ..என்ன உலகம் சார்!” என்று அலுத்துக் கொள்ள வேண்டாம்.
நமது சமுதாய அமைப்பு அப்படி!
பாலிவுட்டில் பேமஸ் ராப் பாடகர் யோ யோ ஹனி சிங் .இவரின் மனைவி ஷாலினி தல்வார்.
இருவருக்கும் கல்யாணம் ஆகி பத்து வருஷம் இருக்கலாம்.
தற்போது புருஷன் மீது ஷாலினி 120 பக்கத்துக்கு புகார் செய்திருக்கிறார்.டிஸ் ஹஸாய் நீதி மன்றத்தில் வழக்கு நடக்கிறது.
ஹிர் தேஜ் சிங் என்கிற யோ யோ ஹனி சிங் மற்றும் அப்பா உள்ளிட்ட குடும்பத்தினர் வன்முறை ,ஏமாற்றுதல் ,போதை மருந்து பயன்படுத்தல் உள்ளிட்ட பலவித கொடுமைகளை செய்து வருகிறார்கள் .
வேலையிலிருந்து நிற்க சொல்லி கட்டாயப்படுத்தினார் ,இதற்காக தனி அறையில் 18 மணி நேரமாக அடைத்து வைத்து உணவு கூட கொடுக்காமல் கொடுமை படுத்தினர்.
மூர்க்கத்தனமாக என்னை நடத்தினர் ,ஆடு மாடுகளைப்போல அடித்து துன்புறுத்தினர். எங்களது திருமண புகைப்படங்கள் வெளியாவதற்கு நான்தான் காரணம் என சொல்லி இரக்கமின்றி உதைத்தனர்.
என் மாமனாரும் போதையில் என்னுடைய அறைக்கு வந்து பலாத்காரம் செய்ய முயன்றார் .என்று புகாரில் கூறி இருக்கிறார்.