ஓஎஸ்டி ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளரான ராம சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாமன்னன் படத்தை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது,, “கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆனந்தி, பாயல் ராஜ்புத் , யோகிபாபு நடிக்க ஏஞ்சல் என்ற படத்தை தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது.
கடந்த 2018 ஆம் ஆண்டு இப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 80 சதவித படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டன.
20 சதவிகித படப்பிடிப்பு இன்னும் நடத்த வேண்டிய சூழல் இருக்கிறது. ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல் மாமன்னன் படத்தில் நடித்துள்ள உதயநிதி அந்தப் படமே தனது கடைசி படம் என்று கூறியுள்ளார்.ஒப்பந்தப்படி இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் அவர் இழுத்தடிக்கிறார்.
எனவே ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை உதயநிதி ஸ்டாலின் நிறைவு செய்து தர வேண்டும். அதுமட்டுமின்றி ரூ.25 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். மாறி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி,வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படம் வரும் ஜூன் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.