நடிகர் தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்து வந்த ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி விட்டதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்திற்காக நடிகர் தனுஷ் தாடி மீசையோடு இதுவரை எந்த ஒரு படத்திலும் நடிக்காத வேடத்தில் நடித்து வந்த நிலையில், தன்னுடைய காட்சிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில்,உடனடியாக திருப்பதி கோவிலுக்கு தனது பெற்றோர் மற்றும் மகன்கள் யாத்ரா – லிங்காவுடன் சென்று மொட்டை அடித்து நேர்த்திக்கடனை செலுத்தி உள்ளார்.
இது குறித்த சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான, திருச்சிற்றம்பலம் மற்றும் வாத்தி ஆகிய இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ‘கேப்டன் மில்லர்’ படத்தை தொடர்ந்து, இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படத்திலும், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு பாலிவுட் படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.