அரபி புரடக்சன் பட நிறுவனம் சார்பில், ரஜீஃப் சுப்பிரமணியம் தயாரிக்கும் புதிய படம், “பைண்டர்” இதில் நடிகர் சார்லி முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். பரபரப்பான திரில்லராக உருவாகும் இப்படத்தை, இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயக்குவதோடு, இப்படத்தில் முக்கியமான வேடத்திலும் நடித்துள்ளார். இவர்களுடன் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர் நடிகை பிரானா ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர்.
உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் பரபரப்பான திரில்லர திரைப்படமாக உருவாகும் “பைண்டர்” படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை நடிகர்கள் விஜய் சேதுபதி , எஸ் ஜே சூர்யா தங்களது சமூக வலைதளத்தின் மூலம் வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவருக்கு பெற்றுத்தரும் நிறுவனத்தை பற்றிய உண்மை கதையின் அடிப்படையில், சென்னை பின்னணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
, இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.இறுதிக்கட்