பிரபல ராப் பாடகர்கள் அறிவு , தீ இருவரும் சேர்ந்து பாடிய ‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது . சந்தோஷ் நாரயாணன் இசையில் வெளியான இப்பாடல் பெரும் வரவேற்பை பெற்றது இந்நிலையில் பாடகர் அறிவு இசையமைப்பில் உருவாகியுள்ள ‘வள்ளியம்மா பேராண்டி’ ஆல்பம் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில் இயக்குனர் பா.ரஞ்சித் கலந்து கொண்டு பேசுகையில்,”எஞ்சாய் எஞ்சாமி” பாடல் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. அதற்கு அறிவின் எழுத்தும் மிக முக்கியமான காரணம். பல தலைமுறைகளின் குரல்களை வார்த்தைகளாக மாற்றி குழந்தைகளிடமும் எளிமையாக சென்று சேரக்கூடியது. அதன் பிறகு அறிவுக்கு நிறைய பிரச்சனைகள் வந்த. மனதளவில் அவர் ரொம்ப பாதிக்கப் பட்டார்.
அறிவு தீப்பொறி பறக்க பாடக் கூடியவர். ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒரு குழந்தை மாதிரி. ரொம்ப சென்சிட்டிவான ஆள். ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் நாம் அவர் அருகில் அமர்ந்து தாலாட்டி தான் அவரை சமாதானப் படுத்த முடியும் . ஒரு கட்டத்திற்கு மேல் இசையை கைவிட்டு விடலாம் என்று அறிவு யோசிக்க தொடங்கினார். அந்த போராட்டிற்கான பதில் தான் இந்த பண்ணிரெண்டு பாடல்கள் என்று நான் சொல்வேன்.” இவ்வாறு அவர் பேசினார்