அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில்,இளையராஜா இசையமைத்த ‘இளமை இதோ இதோ’, ‘ஒத்த ரூபா தாரேன்’, ‘என் ஜோடி மஞ்சக் குருவி ‘ ஆகிய பாடல்கள், முக்கியக் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து தன்னுடைய பாடல்களை தனது அனுமதி இல்லாமல் படத்தில் பயன்படுத்தியதற்காக அதன் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா தரப்பிலிருந்து, , ரூ.5 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும், இல்லையெனில் அந்தப் பாடல்களை படத்திலிருந்து நீக்க வேண்டும் எனக் கூறி .நோட்டீஸ் அனுபப்பட்டுள்ளது.இந்நிலையில் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனிடம்,காப்பி ரைட்ஸ் விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப பட்டது. அதற்கு பதில் அளித்து கங்கை அமரன் பேசுகையில்,”காப்பி ரைட்ஸ் விவகாரத்தில், உலக அளவில் என்ன விதி இருக்கிறதோ அதைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம். அந்தப் பாடலை பயன்படுத்துகிறோம் என்று அனுமதி கேட்டு இருந்தால் அண்ணன் நிச்சயமாக கொடுத்திருப்பார். ஆனால் அனுமதி கேட்காதது தான் பிரச்சனை.அஜித் படமாக இருந்தால் என்ன, அது எங்களின் சொத்து அதை எப்படி நீ திருடலாம், என் வீட்டுக்குள் நீ எப்படி அனுமதி இல்லாமல் வரலாம். அந்த படத்திற்கு என்று ஒரு இசையமைப்பாளர் இருக்கிறார் … அவரிடம் இப்படி ஒரு மியூசிக் வேண்டும் என்று கேட்டு போடசொல்ல வேண்டியது தானே… அதை செய்யாமல், அனுமதி வாங்காமல், எங்கள் பாட்டை எப்படி அந்த படத்தில் பயன்படுத்தலாம். கேட்டு இருந்தால் நிச்சயம் சந்தோஷமாக கொடுத்து இருப்போம். எங்களுக்கு நிச்சயமாக பணத்தாசை இல்லை எங்களிடம் அதிகமாக பணம் இருக்கிறது இவ்வாறு கங்கை அமரன் காட்டமாக பேசி உள்ளார்.