
நான் அரசியல்ல வரது பேருக்கும், புகழுக்கும் பணம் சம்பாதிப்பதற்கும் வரலை. அதை நீங்க ஆயிரம் மடங்கு கொடுத்துட்டீங்க. பதவி மேல எனக்கு ஆசை இருந்தால் 1996லயே நான் அரசியல்ல வந்திருப்பேன். அது வேண்டாம்னு தள்ளி வைச்சேன். 48 வயசுலயே அதை தள்ளி வச்சேன், 68 வயசுல அந்த ஆசை வருமா. அரசியல் ரொம்ப கேட்டுப் போச்சி. நாட்டு அரசியல் ரொம்ப கெட்டுப் போச்சி.ஜனநாயகம் சீர்கெட்டுப் போச்சி. கடந்த ஒரு ஆண்டா, தமிழ்நாட்டில் நடந்த சில அரசியல் நிகழ்ச்சிகள், சம்பவங்கள், ஒவ்வொரு தமிழக மக்களையும் தலைகுனிய வச்சிடுச்சி. எல்லா மாநில மக்களும் நம்மளப் பார்த்து சிரிக்க வச்சிட்டிருக்காங்க.இந்த நேரத்தில் இந்த முடிவை நான் எடுக்கலைன்னு சொன்னால், என்னை வாழ வைத்த தமிழக மக்களுக்காக நான் இந்த முடிவெடுக்கலன்னா அந்த குற்ற உணர்வு என்னை பாதிக்கும். அரசியல் மாற்றம், அதுக்கு நேரம் வந்தாச்சி, சிஸ்டமே மாத்தணும். உண்மையான நேர்மையான நாணயமான வெளிப்படையான சாதி மத சார்பற்ற ஒரு ஆன்மீக அரசியல் கொண்டு வரணும். அதுதான் என்னுடைய நோக்கம், விருப்பம், குறிக்கோள். அது ஒரு தனி மனுஷனால முடியாது.
இது சினிமா இல்லை, நாம் காவலர்களாய் மாறப்போகிறோம், நாம் மட்டும் போதாது.எல்லாவற்றையும் மாற்றனும்,தகுந்த பதவிக்கு தகுந்த ஆளை நியமித்து வேலை பார்க்கிறார்களா என்பதை கண்காணிப்பதே எனது வேலை.அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தலுக்கு வருவது எளிதல்ல அது கடலில் மூழ்கி முத்துக்குளிப்பது.பெண்கள், படித்தவர்கள், படிக்காதவர்களை அனைவரையும் மன்றத்தில் இணைக்க வேண்டும்.ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து காவலர்களாக மாற்றுவேன் . நேர்மையான, வெளிப்படையான ஆன்மீக அரசியலை கொண்டுவர வேண்டும்.கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்தித்து ஆட்சியை பிடிப்பது நடுக்கடலில் முத்தெடுப்பதை போன்ற கஷ்டமானது. ஆண்டவன் அருள், மக்கள் அன்பு, ஆதரவு இருந்தால்தான் இதை சாதிக்க முடியும்.இரண்டுமே எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. பெயர், புகழ், பணம் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரப்போவதில்லைசட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின் வாக்குறுதிகளை 3 ஆண்டுகளில் நிறைவேற்றவில்லை எனில் பதவி விலகுவேன்.அரசியல் என்னும் குளத்தில் நாம் இன்னும் இறங்கவில்லை ஆனால் நீந்தத் தெரியும். தகுந்த வேலைக்கு தகுந்த நபரை நியமித்து கண்காணிக்கும் பிரதிநிதியாக இருப்பேன். பழைய காலத்தில் அடுத்த நாட்டு கஜானாவை கொள்ளையடிப்பார்கள்இப்போ சொந்த நாட்டிலேயே, சொந்த பூமிலேயே கொள்ளையடிக்கிறார்கள்.கட்சி சிஸ்டத்தையே மாற்ற வேண்டும், வேர், கிளை போன்ற அனைத்துமே தொண்டர்கள்.தமிழக மக்கள் எல்லாரும் என் கூட இருக்கணும். இது சாதாரண விஷயமில்லை, இது எனக்குத் தெரியும். கட்சி ஆரம்பிச்சி, தேர்தல்ல போட்டியிடறது சாதாரண விஷயமில்ல. நடுக்கடல்ல முத்து எடுக்கிற மாதிரி. மக்களுடைய அன்பு, அபிமானம், ஆதரவு இருந்தால்தான் இதை சாதிக்க முடியும். ஆண்டவனுடைய அருள், மக்களுடைய அன்பு இரண்டும் எனக்குக் கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு” என ரசிகர்களின் ஆரவாரத்துடன் அறிவித்தார்.
.












