கனவுக் கன்னிகள் மட்டும்தான் இருப்பார்களா? கனவுக் கண்ணன்களும் இருக்கவே செய்வார்கள். தமிழ்ச்சினிமாவில் மாதவனிடம் மட்டும்தான் எம்.ஜி.ஆரின் புன்னகையைப் பார்க்க முடியும். அதனால்தான் என்னவோ இளையோர் பட்டாளம் இன்னமும் ‘மேடி, மேடி ‘என பின்னால் திரிகிறது. அண்மையில் தோள் பட்டையில் அறுவைச்சிகிச்சை .கடுமையானதுதான்! இருந்தாலும் மனதைரியம். சந்தித்து வெற்றியும் பெற்று விட்டார்.
நாற்பதைக் கடந்தும் இன்னமும் இளமையாக இருக்கிறாரே,காயகல்பம் சாப்பிடுகிறாரோ?
“அந்த ரகசியத்தை என்னுடைய எலும்புகளிடம் கேளுங்கள் “என்று சொல்லி விட்டு சிரிக்கிறார்.”அதற்குத்தான் என்னுடைய உண்மையான வயது தெரியும்,!”
“எனது இளமைக்காக நான் எப்போதும் ‘அவுட் ஆப் வே’ போவதில்லை. ஹேர்-டை மற்றும் இன்னும் பிற சமாசாரங்கள் தேவையே இல்லை. நரை முடி இருந்தால் இருக்கட்டுமே!அப்படியேதான் இருப்பேன்.( தல’ யை பின் பற்றுகிறார் மாதவன் என டைட்டில் போடலாமா?) எனது மனது சுத்தம்.ஆரோக்கியமாக இருக்கிறது.நான் நானாக இருப்பதால்தான் இளையோர் ஆதரவு இருப்பதாக நினைக்கிறேன்” என்கிறார் மாதவன்.
வரவேற்கிறோம் மேடி! முழுமையாக குணம் அடைய வாழ்த்துகிறோம்.