மணமேடை ஒருபக்கம் இருந்தாலும் சாப்பாட்டு பந்தியில் கூட்டம் ஜே..ஜே..வென அமர்க்களப்படும்.என்னென்ன அயிட்டங்கள் இலையில் இருக்கிறது என்பதை நோட்டம் விட்டு பந்தியில் உட்காருகிறவர்களும் இருக்கிறார்கள்.இரண்டாவது பந்திக்கு இடத்தை ரிசர்வ் பண்ண காத்திருக்கிற ‘கனவான்’களும் இருப்பார்கள். சாப்பிட்டு முடித்துவிட்டு ருசியை விமர்சிப்பவர்களும் இருப்பார்கள்.
அதைப்போலத்தான் ‘காலா’ திரைப்படத்தை ராயப்பேட்டை மல்டி பிளக்ஸ் தியேட்டரில் படம் பார்க்க வந்தவர்களின் மனப்பான்மையும் இருந்திருப்பதாக சொல்கிறார்கள். பிரபல தொலைக்காட்சியின் அதிபர்களும் அவர்களைச் சேர்ந்த வணிக கணிப்பாளர்களும் பலவிதமான கருத்துகளை சொல்லி இருக்கிறார்கள். குழம்பிப் போய் இருக்கிறது தொலைக்காட்சி குழுமம்.
ஆனால் அரசியல் கருத்துகள் அவர்கள் சார்ந்திருக்கிற அரசியல் கட்சியைப் பாதிக்குமா என்கிற விவாதம்தான் முக்கியமாக நடந்திருக்கிறது.