சதை களவாணிகள் வேலையே செய்யாமல் உட்கார்ந்தே கிடப்பார்கள். கதைத் திருடர்கள் ‘எங்கடா லாவிட்டுப் போகலாம்’ என இடம் தேடி அலைவார்கள்.அதனால் இயக்குநர்கள் ‘யாரிடமும் கதையை அடிச்சுக் கேட்டாலும் சொல்லாதே’என்று நட்சத்திரங்களை எச்சரிப்பார்கள். இது சினிமாவில் வழக்கமான நடை முறைதான்!
சவரக்கத்தி பட ஸ்வாதிஷ்டா ரொம்பவேதான் அரண்டு போய் இருக்கிறார்.
“முக்கியமான கேரக்டர்.ஜீவா சாருடன் வருகிறேன்.படத்தின் பேர் ‘கீ’. கேரக்டர் பத்தியோ, கதையைப் பத்தியோ சொல்லக்கூடாதுன்னு டைரக்டர் சார் உத்தரவு. அம்புடுதேன்” என சிரிக்கிறது அந்த முல்லைபூ.
‘மிஷ்கின், ராம் ஆகியோருடன் ‘சவரக்கத்தி’யில் நடித்த போது அனுபவம் எப்படி இருந்தது? ரெண்டு பேரும் ‘டப்’ ஆன ஆளுங்களாச்சே?’
“அப்படி சொல்லாதிங்க. ரொம்பவும் சாப்ட். நல்லாவேதான் பழகினாங்க, சினிமாவில் எப்படி இருக்கணும்.யார் யாரிடம் எப்படி நடந்துக்கணும்னு கிளாஸ் எடுத்தாங்க, எனக்கு சினிமாவில் எந்த பின்னணி ஆதரவும் இல்லாமல்தான் வந்திருக்கேன். அவங்கதான் எனது ஞானக்கடவுள்கள்!”
‘யார் மாதிரி வரணும்னு ஒரு ஆசை வெச்சிருப்பீங்களே?’
“அனுஷ்கா, ஐஸ்வரியா ராஜேஷ் மாதிரி வரணும், சாலினி அஜித் மேடம் மாதிரி பெரி ஹீரோக்களுடன் நடிக்கணும் .மணிரத்னம் சார் ‘அலைபாயுதே 2 ‘ எடுக்கணும்.அதில் நான் நடிக்கணும். இதாங்க என் ஆசை!”
நல்ல ஆசைதான்! முதலில் வாயில் நுழைகிற மாதிரி பெயரை மாத்தும்மா!