தமிழக அரசியல் வரலாறில் ஏப்ரல் 5-ம் தேதி முக்கிய நாளாகி விட்டது. காவிரி மேலாண்மை வாரியம் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக இதுநாள் வரை மென்மையான போக்கு நிலவி அந்த நிலை மாறி இருக்கிறது .திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட பொது வேலை நிறுத்தம் வெற்றிகரமாக தொடங்கி இருக்கிறது. 90 சத விகித கடைகள் அடைக்கப்படுள்ளன. அதிமுக ஆதரவு தொழிற் சங்கத்தினர் பங்கேற்காததால் சில பஸ்கள் மட்டுமே இயங்கின. மக்கள் குறைந்த அளவிலேயே பயணம் செய்தனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பொதுவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிற மாணவர்களை போலீசார் கடுமையான முறையில் அகற்றி வருகின்றனர்