மிஸ்டர் .சந்திரமவுலியின் மெயின் ஹீரோயின் ரெஜினா. சென்னைப் பொண்ணு.மகளிர் கிறித்தவக் கல்லூரி முன்னாள் மாணவி. ஏழு வயதிலேயே தொலைக்காட்சியில் குழந்தை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் ‘ஆங்கர்’ ஆனார். கவுதம் கார்த்திக்கு இணையாக நடிக்கும் இந்த நடிகைக்கு காதலும் வந்து கசந்து போனது. அதெல்லாம் பழங்கதை
விட்டுத்தள்ளுங்கள்.
தற்போது இளம்பெண்கள் மத்தியில் வைரலாகி வருவது இவரது கூகுள் வீடியோதான்!
அதில் அந்த மூணு நாள் பிரச்னைகள் பற்றி ஒரு பெண்ணுடன் உரையாடியது உதவியாக இருக்கிறது என்கிறார்கள்.
“என்னால் பிறந்தநாளைக் கூட சந்தோஷமாக கொண்டாட முடியவில்லை.பீரியட் நாட்களில் கோபம் கோபமாக வருகிறது. பாய் பிரண்டுடன் { அதை சொல்லு,} ஜாலியாக சினிமாவுக்கு போக முடியல.போன் பேசினாலும் ‘கட’பண்ணத்தான் தோன்றுகிறது. கோவிலுக்குப் போகக்கூடாது என்கிறார்கள். சாமி அறைக்குள் நுழையாதே என்கிறார்கள்.தாங்க முடியல மேடம்!” என ஒரு இளம் வயதுப் பெண் கேட்க .நமது கதாநாயகி பதில் சொல்கிறார்.
” பெண்ணே! உன்னை நீ மாத்திக்கணும்.கடவுள் உருவாக்கியவள் பெண். அவளுக்கு அதிகமான சலுகைகளை சக்தியை கொடுத்திருக்கிறார்.இன்னொரு உயிரை அவளால் படைக்க முடியும். நிறைய பாசிட்டிவ்களை உனக்கு கொடுத்த கடவுள் தன்னை வணங்கக்கூடாது என தடை போடுவாரா?
இந்த சமுதாயத்தின் சம்பிரதாயங்கள் .நம்பிக்கைகள் ,உணர்வுகளில் நம்பிக்கை இருந்தால் வீட்டிலேயே அமைதியாக இருந்து விடு.” என சொல்லி இருக்கிறார்.
‘பேடு’ விதம் விதமாக வந்து விட்டாலும் ‘பேட்’ நம்பிக்கைகள் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறது.
விடுங்க ரெஜினா!